என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை: மத்திய சட்ட மந்திரி பேட்டி
    X

    நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை: மத்திய சட்ட மந்திரி பேட்டி

    நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க இ.கோர்ட்டு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருவதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் நடக்கும் மண்டல பத்திரிகை ஆசிரியர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ளேன். பிரதமர் மோடியின் 2 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் குக்கிராமங்கள் உள்பட அனைத்து துறை திட்டங்கள் சென்று அடைந்து இருக்கிறது.

    நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க இ.கோர்ட்டு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆங்கிலத்தில் பேட்டி அளித்த ரவிசங்கர் பிரசாத், பிரதமர் மோடி ஆட்சி என்று குறிப்பிடுவதற்கு பதில் முதல்-அமைச்சர் மோடி ஆட்சியில் என்று தவறாக இரண்டு முறை கூறினார்.
    Next Story
    ×