என் மலர்
செய்திகள்

பொன்னமராவதி பகுதியில் கனமழை
பொன்னமராவதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. நேற்று மாலை 5மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது .
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. நேற்று மாலை 5மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது . முக்கிய சாலைகளான அண்ணா சாலையில் மழை நீர் சூழ்ந்தது.
இதே போல ஆஸ்பத்திரி ரோடு,புக்குடி வீதி,வேலுப்பிள்ளை காம்பவுன்ட், ஆகிய பகுதிகளில் சாக்கடையில் ஏற்பட்ட மண் அடைப்புகள் காரணமாக அங்குள்ள கடைகளிலும் வீடுகளிலும் முட்டியளவு சாக்கடை நீர் புகுந்தது.
இதேபோல பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Next Story






