என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே பாம்பு கடித்து பெண் பலி
வேதாரண்யம் அருகே வயலில் வேலை பார்த்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பெரியகுத்தகை நாட்டான்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மணிமேகலை (50). இவர் தனது வீட்டு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை இறந்து விட்டார். மகன் கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story






