என் மலர்
செய்திகள்

கைதான ரவி
கொலை வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
கொலை வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
கோவளம் அருகே திருவிந்தை சவுக்கு தோப்பில் 2009ஆம் ஆண்டு மைலாப்பூர் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட மதுரை செல்லூரை சேர்ந்த ரவி(43) கைது செய்யப்பட்டான்.
பின்பு ஜாமீனில் வெளி வந்தவன் 2010ல் இருந்து விசாரணைக்கு நீதிமன்றம் வராமல் தலைமறைவாக இருந்து வந்தான. அவனை பிடித்து ஜெயிலில் அடைக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. மாமல்லபுரம் போலீசார் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கருங்காலி குப்பம் பகுதியில் ரவி தங்கி இருப்பதாக மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உத்தரவின் பேரில் போலீஸ்காரர் மோகன் அங்கு சென்று ரவியை கைது செய்தார். பின்னர் சென்னை புழல் ஜெயிலில் ரவி அடைக்கப்பட்டான்.
Next Story






