என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவான்மியூர் அருகே தறிகெட்டு ஓடிய பஸ் மோதி தொழிலாளி பலி
    X

    திருவான்மியூர் அருகே தறிகெட்டு ஓடிய பஸ் மோதி தொழிலாளி பலி

    திருவான்மியூர் அருகே தறிகெட்டு ஓடி பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவான்மியூர்:

    சென்னை கானாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). மூன்று சக்கர தள்ளுவண்டியில் சாலையில் கிடக்கும் காகிதங்களை பொறுக்கி விற்கும் தொழிலாளி ஆவார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கல்லறை தெரு ஆகும்.

    இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திருவான்மியூர் அருகே உள்ள கானாத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் காகிதங்கள் பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் திடீரென்று பஸ் தறிகெட்டு ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஓடி தொழிலாளி ஆறுமுகம் மீது மோதியது. பின்னரும் பஸ் வேகமாக ஓடி சாலையோரம் சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பஸ்சில் பயணம் செய்த பாவாடை உள்பட 4 பயணிகள் காயம் அடைந்தனர்.
    Next Story
    ×