என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 4 ஆயிரம் அலங்கார ஆமைகள் சிக்கின
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானத்தில் கடத்தி வந்த 4 ஆயிரம் அலங்கார ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த முகமது சுதீப் (வயது 37) என்பவரின் உடமைகளை ஸ்கேன் செய்த போது அதில் ஏதோ அசைவது போல இருந்தது. எனவே அதை சுங்கத் துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.
அப்போது ஒரு பையில் 4 ஆயிரம் சிவப்பு காது அலங்கார ஆமைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது எதற்காக கடத்தி வரப்பட்டது மருத்துவம் தொடர்பாக கடத்தி வரப்பட்டதா? அல்லது அலங்காரம் செய்வதற்காக கடத்தி வரப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த முகமது சுதீப் (வயது 37) என்பவரின் உடமைகளை ஸ்கேன் செய்த போது அதில் ஏதோ அசைவது போல இருந்தது. எனவே அதை சுங்கத் துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.
அப்போது ஒரு பையில் 4 ஆயிரம் சிவப்பு காது அலங்கார ஆமைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது எதற்காக கடத்தி வரப்பட்டது மருத்துவம் தொடர்பாக கடத்தி வரப்பட்டதா? அல்லது அலங்காரம் செய்வதற்காக கடத்தி வரப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






