என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஓட்டல் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
ஸ்ரீபெரும்புதூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஓட்டல் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிரசன்ன ராமபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள். இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் ஜான் மார்ஷல் (வயது 24). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் கலை நிபுணராக (கேட்டரிங்) பணியாற்றி வந்தார்.
கடந்த 24-ந்தேதி, தனது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் ஜான் மார்ஷல் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஜான் மார்ஷல் மூளைச்சாவு அடைந்து விட்டதாக நேற்றுமுன்தினம் இரவு அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
‘உயிர் போனாலும் உடல் உறுப்புகளாவது பூமியில் வாழட்டும்’, என்ற கனத்த இதயத்துடன் ஜான் மார்ஷலின் உடல் உறுப்புகளை தானமாக தர அவரது பெற்றோர் முன்வந்தனர்.
இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு ஜான் மார்ஷலின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு கிடைக்க இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிரசன்ன ராமபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள். இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் ஜான் மார்ஷல் (வயது 24). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் கலை நிபுணராக (கேட்டரிங்) பணியாற்றி வந்தார்.
கடந்த 24-ந்தேதி, தனது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் ஜான் மார்ஷல் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஜான் மார்ஷல் மூளைச்சாவு அடைந்து விட்டதாக நேற்றுமுன்தினம் இரவு அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
‘உயிர் போனாலும் உடல் உறுப்புகளாவது பூமியில் வாழட்டும்’, என்ற கனத்த இதயத்துடன் ஜான் மார்ஷலின் உடல் உறுப்புகளை தானமாக தர அவரது பெற்றோர் முன்வந்தனர்.
இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு ஜான் மார்ஷலின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு கிடைக்க இருக்கிறது.
Next Story






