என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே படகு பழுதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் வெங்கட்ராம், ரமேஷ், முத்துமாரி , கருப்பையா ஆகிய 4பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 10 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது , அலை சீற்றத்தால் என்ஜினுக்குள் கடல் நீர் புகுந்து பழுதானது.
இதனால் 4 மீனவர்களும் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். உடனே மீனவர்கள் 1093 என்ற அவசர எண்ணுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அதி நவீன ரோந்து படகு மூலம் சென்று 4 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து 4 பேரும் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.






