என் மலர்
செய்திகள்

விஜயகாந்த் பிறந்தநாள்: மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
நெய்வேலி:
தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் சார்பில் விஜயகாந்த் பிறந்த தின விழா வறுமை ஒழிப்பு தினமாக நெய்வேலி கெங்கை கொண்டான் பேரூர் தே.மு.தி.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
நகர செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி எழிலரசன், தலைமைக்கழகப் பேச்சாளர் தென்னவன், துரை, மகாதேவன், பேரூர் தலைவர் அழகுவேல், பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில சிறப்பு விருந்தினராக தே.மு.தி.க. பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயப்பிரியா, ஜெயசங்கர் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் முத்துக்குமார், தட்சிணாமூர்த்தி, பிரதிநிதிகள் சுரேஷ், பாலு திருமால், சம்பத், ஜெகஜீவன் ராம், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூர் தலைவர் அழகுவேல் நன்றி கூறினார்.






