என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவனை கழுத்தை அறுத்து கொன்றது கள்ளக்காதல் ஜோடி?: போலீசார் தீவிர விசாரணை
    X

    சிறுவனை கழுத்தை அறுத்து கொன்றது கள்ளக்காதல் ஜோடி?: போலீசார் தீவிர விசாரணை

    திட்டக்குடி அருகே சிறுவனை கழுத்தை அறுத்து கொன்றது கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாமோ என்று போலீசார் தீவிர விசாரணை நடத்த வருகிறார்கள்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர் களுடைய மகன் நித்தீஷ் (வயது 4). சின்னசேலம் அருகே உள்ள கன்னியா மூரில் பிரிகேஜி படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய நித்தீஷ் வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

    இரவு 8 மணிவரையிலும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உற வினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடினர்.

    அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவறை அருகே ரத்ததுளிகள் சிதறிக் கிடப்பதை பார்த்தனர். கழிவறையின் கதவு பாதி திறந்த நிலையில் இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது நித்தீஷ் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக் கப்பட்டிருந்தது.

    உடனே முருகேசன் நித்தீசின் உடலை வீட்டிற் குள் தூக்கி வந்தார். போலீசுக்கு தகவல் தெரி விக்காமல் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சிறுவனை கொன்ற கொலையாளி யார்? அவனை எதற்காக கொலை செய்தனர். என்று போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி சடங்கு நடத்த முயற்சி செய்தது ஏன்? என்று முருகேசன் மற்றும் சங்கீதா விடம் போலீசார் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

    எனவே இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தனித் தனியாக விசாரணை நடத்தினர்.

    கணவன்-மனைவிக்குள் தகராறு ஏதும் உண்டா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் தங்களுக்குள் எந்த தகராறும் இல்லை என்று கூறினர்.

    பின்னர் கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வர வழைக்கப்பட்டது. நித்தீசின் தந்தை முருகேசனும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

    நித்தீஷ் பிணமாக கிடந்த கழிவறையை மோப்பம் பிடித்த மோப்ப நாய் வீட்டிற்குள் ஓடியது.

    பின்னர் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு கிடந்த துண்டை கவ்வியது. அதைத் தொடர்ந்து வெளியே ஓடிவந்து முருகேசனை கவ்விப்பிடித்தது.

    இதனால் இந்த கொலையில் முருகேசனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    எனவே அவரை மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் நித்தீஷ் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த என் மகனை வீட்டிற்குள் தூக்கி வந்ததால் தான் மோப்ப நாய் என்னை கவ்விப்பிடித்தது என்றார்.

    கொலைகுறித்து முருகேசன் உறவினரிடம் விசாரித்தபோது முருகேச னுக்கு பரமேஸ்வரி, ராஜேஸ்வரி என்ற மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு நித்தீஷ் பிறந்தான். அவன் மீது முருகேசன் அதிக பாசமாக இருந்தார் என்று கூறினர்.

    எனவே முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதினர். அதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத் தில் இருந்து விடுவித்தனர்.

    முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா என்று விசாரித்தனர். அப்போது முருகேசன் குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்தவித தகராறும் இருந்ததாக தெரியவில்லை.

    சிறுவன் நித்தீஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலையில் நண்பர்களுடன் விளை யாடி விட்டு அருகில் உள்ளவர்களின் வீட்டிற்கு சென்று நண்பர்களோடு டி.வி.பார்த்துள்ளான். அங்கிருந்து வெளியே வந்தபிறகு தான் கொலை செய்யப்பட்டுள்ளான்.

    எனவே அந்த வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித் தனர். அதிலும் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. சிறுவன் நித்தீசை நரபலி கும்பல் கொலை செய்து கழிவறையில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று தகவல் பரவியது.

    நரபலி கொடுத்திருந்தால் அந்த இடத்தில் சந்தனம், குங்குமம் போன்ற பூஜைப் பொருட்கள் கிடக்கும். ஆனால் நித்தீஷ் பிணமாக கிடந்த இடத்தில் எந்த பொருளும் இல்லை.

    எனவே அவன் நரபலி கொடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

    நித்தீஷ் வீட்டின் அருகில் உள்ள கழிவறை பயன்படுத்தப்படாமலே உள்ளது. அதை சுற்றி கருவேல மரங்கள் உள்ளன.

    எனவே அந்த கழிவறைக் குள் புகுந்த கள்ளக்காதல் ஜோடியை சிறுவன் நித்தீஷ் பார்த்துவிட்டதால் வெளியே சொல்லிவிடு வான் என்று நினைத்து அவர்கள் நித்தீசை கொன்று பிளேடால் கழுத்தை அறுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையொட்டி கொலை யாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. துணைபோலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ் பெக்டர்கள் ராஜாராம், சுதாகர் ஆகியோர் தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர்.

    கொலையாளிகளை அவர்கள் விருத்தாசலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×