என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் தகராறில் மாணவர் கொலையா?: பேராசிரியை மீது பெற்றோர் புகார்
    X

    காதல் தகராறில் மாணவர் கொலையா?: பேராசிரியை மீது பெற்றோர் புகார்

    பெருங்களத்தூர் அருகே காதல் தகராறில் மாணவர் படுகொலை செய்யப்பட்டார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    மேடவாக்கம், வேளச்சேரி மெயின்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தவர் அரவிந்த் குமார் (வயது 19). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும்.

    அரவிந்த்குமார் அதே கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் ஒருவரிடம் அவரது வீட்டுக்கு பாடம் சம்பந்தமாக அடிக்கடி சென்று வந்தார். அப்போது இருவரும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அரவிந்த்குமார் திடீரென மாயமானார். அதேநாளில் கல்லூரி பேராசிரியையும் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து இருதரப்பினரும் சேலையூர் போலீசில் புகார் செய்தனர். மறுநாள் பேராசிரியை மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அரவிந்த்குமார் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி பெருங்களத்தூர் அருகே தண்டவாளப் பகுதியில் அரவிந்த்குமார் இறந்து கிடந்தார். அவரது உடலை தாம்பரம் ரெயில்வே போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ரெயில் மோதி அரவிந்த்குமார் இறந்ததாக கூறப்பட்டது.

    இதற்கிடையே மாணவர் அரவிந்த்குமாரின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் அரவிந்த்குமார் சாவில் மர்மம் இருப்பதாக பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றி ரவிசந்திரன் கூறும் போது, பேராசிரியை மாயமான அதே நாளில் அரவிந்த்குமாரும் மாயமாகி இருந்தார். பேராசிரியை திரும்பி வந்ததும் எனது மகன் குறித்து முறையாக விசாரிக்கவில்லை.

    பின்னர் ரெயில் மோதி அரவிந்த்குமார் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். அவனது சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து பேராசிரியையிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். புகார் கூறப்பட்டு உள்ள கல்லூரி பேராசிரியைக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளனர். காதல் தகராறில் அரவிந்த்குமார் தீர்த்து கட்டப்பட்டு கொலையை மறைக்க உடலை தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக அந்த கல்லூரி பேராசிரியையிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×