என் மலர்
செய்திகள்

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பா? என சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
சேலத்திலிருந்து விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்தக்கொள்ளை சம்பவம் சேலத்தில் நடந்ததா? அல்லது சென்னையில் நடந்ததா? என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் மெதுவாக வந்த போது கொள்ளை நடந்ததா என்றும் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பழைய குற்றவாளிகளுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி சென்னை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் ரெயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர்.
அதேபோல் விருத்தாசலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு பதிவாகியுள்ள கொள்ளை வழக்குகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்தில் இரும்பு பொருட்கள் மற்றும் நகைகள் திருட்டு, ஓடும் ரெயிலில் பயணிகளிடம் தங்கச் சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்தனர்.
தண்டனை பெற்று வெளியே வந்த அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று கண்காணித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று அவர்களை பிடித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.
சேலத்திலிருந்து விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்தக்கொள்ளை சம்பவம் சேலத்தில் நடந்ததா? அல்லது சென்னையில் நடந்ததா? என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் மெதுவாக வந்த போது கொள்ளை நடந்ததா என்றும் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பழைய குற்றவாளிகளுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி சென்னை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் ரெயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர்.
அதேபோல் விருத்தாசலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு பதிவாகியுள்ள கொள்ளை வழக்குகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்தில் இரும்பு பொருட்கள் மற்றும் நகைகள் திருட்டு, ஓடும் ரெயிலில் பயணிகளிடம் தங்கச் சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்தனர்.
தண்டனை பெற்று வெளியே வந்த அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று கண்காணித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று அவர்களை பிடித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.
Next Story






