என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளைடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டையை சேர்ந்தவர் ரகுராமன்(வயது 41). விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டைப்பூட்டி விட்டு குடும்பத்தினருடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றார். இரவு அங்கே தங்கிவிட்டார்.
இன்று காலை ரகுராமன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசில் ரகுராமன் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக் கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டையை சேர்ந்தவர் ரகுராமன்(வயது 41). விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டைப்பூட்டி விட்டு குடும்பத்தினருடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றார். இரவு அங்கே தங்கிவிட்டார்.
இன்று காலை ரகுராமன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசில் ரகுராமன் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக் கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






