என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரானைட் முறைகேடு வழக்கு: தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்- சகாயம் பேட்டி
    X

    கிரானைட் முறைகேடு வழக்கு: தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்- சகாயம் பேட்டி

    கிரானைட் முறைகேடு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி கடந்த நவம்பர் மாதமே சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டோம். தீர்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறோம் என்று சகாயம் கூறினார்.

    கடலூர்:

    கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள வள்ளலார் நகரில் கடலூர் மாவட்ட மக்கள் பாதை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மக்கள் பாதை அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- கிரானைட் முறைகேடு வழக்கு எந்த நிலையில் உள்ளது?

    பதில்:- கிரானைட் முறைகேடு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி கடந்த நவம்பர் மாதமே சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டோம். தீர்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக நல்ல பதில் வரும் என நம்புகிறோம்.

    கே:- மக்கள் பாதை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளீர்கள். அதன் நோக்கம் என்ன?

    ப:- மக்கள் பாதை அலுவலகம் இளைஞர்களுக்கான அமைப்பு. தமிழ்நாட்டில் இப்போது விவசாயம் மோசமான நிலையில் உள்ளது. விவசாயத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்.

    நிறைய இளைஞர்கள் படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுயதொழில் தொடங்க வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    ஏரி-குளங்கள், மரங்கள் போன்றவைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். இதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம்.

    கே:- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாதை அமைப்பு பங்கேற்குமா?

    ப:- மக்கள் பாதை அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் அரசியலில் பங்கேற்க மாட்டோம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×