என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை லோக் அதாலத்தில் 492 வழக்குகளுக்கு தீர்வு
    X

    புதுக்கோட்டை லோக் அதாலத்தில் 492 வழக்குகளுக்கு தீர்வு

    புதுக்கோட்டை லோக் அதாலத்தில் 492 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் (லோக் அதாலத்தில் 492 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 492 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தன் மூலம் வங்கிகளில் வராக் கடனாக இருந்த ரூ.4 கோடியே 73 லட்சம் வசூலிக்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி கே.முரளி சங்கர் தலைமையில் முகாம் நடைபெற்றது. மேலும் இந்த வசூல் முகாமில் அத்தியாவசிய பண்டங்கள் நீதிபதி இங்ஸ்லி கிருஸ்டோபர், தலைமைக் குற்றவியல் நீதிபதி அனில்குமார், கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாஸ் பிரியா, சார்பு நீதிபதி இந்துராணி, குற்றவியல் நீதிபதி நாகராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவீந்திரன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.

    Next Story
    ×