என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்: 2 நாட்கள் நடக்கிறது
அரியலூர்:
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள்- செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாண்டு, நவம்பர் -2016-ம் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட உள்ள கிராம ஊராட்சிகளான ஆண்டிப்பட்டாக்காடு, அருங்கால், இடையத் தாங்குடி, ஆதனக்குறிச்சி, அழகியமணவாளன் மற்றும் அயன்சுத்தமல்லி ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள்- செம்மறியாடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய 22.08.2016 மற்றும் 23.08.2016 ஆகிய இரண்டு தேதிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளிய பெண்கள் தவறாது சிறப்பு கிராம சபையில் மனு செய்து பயன்பெறலாம். என அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.






