என் மலர்

    செய்திகள்

    குளித்தலை அகே அரசு பள்ளி மாணவிகள் 2 ருபேர் கடத்தல்?
    X

    குளித்தலை அகே அரசு பள்ளி மாணவிகள் 2 ருபேர் கடத்தல்?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குளித்தலை அருகே அரசு பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள தோகமலை அடுத்து வரகூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45), இவரது மகள் நளினி வயது 17, தோகமலை அருகே உள்ள செங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி வலக்கம் போல் காலை பள்ளிக்கு சென்று உள்ளார். பின்னர் மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் பள்ளிக்கு சென்று விசாரித்து உள்ளார். அதில் மாலை நளினியும் அவரது தோழி சரஸ்வதியும் பள்ளியை விட்டு சென்று விட்டதாக கூறியுள்ளார்.

    இதனால் நளினி அவரது தோழி சரஸ்வதி வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்து கணேசன் பஞ்சம்பட்டி அருகே கொடிகால் புதூர் பகுதியில் உள்ள சரஸ்வதி வீட்டிற்கு சென்றார். அங்கு சரஸ்வதி தந்தை குழந்தைவேலிடம் நளினி குறித்து கணேசன் விசரித்துள்ளார். இதில் சரஸ்வதியும் வீடு திரும்பாதது தெரியவந்தது.

    இதையடுத்து கணேசன் தோகமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து பள்ளி மாணவிகள் கடத்தபட்டார்களா? அல்லது எங்கு சென்றார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×