search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
    X

    மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

    மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி:

    கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரசாமி. இவரது மகன் விஷ்ணுகுமார் (வயது 28). எலக்ட்ரீசியன்.

    சம்பவத்தன்று இவர் சோமையாம்பாளையம் ஜீவானந்தம் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் குடியிருப்பில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின் இணைப்பை தொட்டு விட்டார். கண் இமைக்கு நேரத்தில் மின்சாரம் அவரது உடல் முழுவதும் பாய்ந்து தூக்கி வீசியது. இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×