என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் ரெயில் மோதி பெண் உடல் சிதறி பலி
Byமாலை மலர்20 Aug 2016 11:05 AM GMT (Updated: 20 Aug 2016 11:05 AM GMT)
திருவண்ணாமலையில் தண்டவாளத்தை கடந்த பெண் ரெயில் மோதியதில் உடல் சிதறி பலியானார்.
திருவண்ணாமலை:
கர்நாடக மாநிலம் சிமோகா நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகம்மா (வயது 40). இவர் பாண்டிச்சேரிக்கு சென்று விட்டு திருவண்ணாமலை பெருமாள் நகரில் வசிக்கும் உறவினர் மஞ்சுளா வீட்டுக்கு செல்வதற்காக இன்று அதிகாலை ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார்.
பெருமாள் நகரில் உள்ள உறவினர் வீட்டின் அருகே சென்றபோது, அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு வந்த பயணிகள் ரெயில் மோதியது. இந்த விபத்தில் நாகம்மா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார், நாகம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X