என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை திறந்து பணம்-பொருட்கள் திருட்டு
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை திறந்து பணம்-பொருட்கள் திருடியது தொடர்பாக 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் உடமைகளை விமான நிலையத்தில் இருந்து விமானம் அருகே கொண்டு செல்வதற்கு பல ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பயணிகளின் உடமைகளை டிராலியில் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றுவார்கள்.
இந்த நிலையில் பயணிகளிடம் இருந்து தங்கள் உடமைகள் திறக்கப்பட்டு பணம்-பொருட்கள் திருட்டு போய் இருப்பதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் பயணிகளின் உடமைகளை கொண்டு செல்லும் தற்காலிக ஊழியர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்கள் ஜெயபிரகாஷ், ராஜேஷ், மகேஷ், நவீன், சரவணன், வடிவேல், ரஞ்சித், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விமான நிலையத்தில் இருந்து பயணிகளின் உடமைகளை கொண்டு செல்லும் இவர்கள் பொருட்களை விமானத்தில் ஏற்றியவுடன் சரியாக பூட்டப்படாத பெட்டி, பைகளை தனியாக எடுத்து அதை திறந்து பணம்-பொருட்களை திருடி உள்ளனர். பின்னர் அதை பங்கு போட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தீவிர கண்காணிப்பு இல்லாதது இவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
எனவே விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடமைகள் பாதுகாப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் உடமைகளை விமான நிலையத்தில் இருந்து விமானம் அருகே கொண்டு செல்வதற்கு பல ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பயணிகளின் உடமைகளை டிராலியில் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றுவார்கள்.
இந்த நிலையில் பயணிகளிடம் இருந்து தங்கள் உடமைகள் திறக்கப்பட்டு பணம்-பொருட்கள் திருட்டு போய் இருப்பதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் பயணிகளின் உடமைகளை கொண்டு செல்லும் தற்காலிக ஊழியர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்கள் ஜெயபிரகாஷ், ராஜேஷ், மகேஷ், நவீன், சரவணன், வடிவேல், ரஞ்சித், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விமான நிலையத்தில் இருந்து பயணிகளின் உடமைகளை கொண்டு செல்லும் இவர்கள் பொருட்களை விமானத்தில் ஏற்றியவுடன் சரியாக பூட்டப்படாத பெட்டி, பைகளை தனியாக எடுத்து அதை திறந்து பணம்-பொருட்களை திருடி உள்ளனர். பின்னர் அதை பங்கு போட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தீவிர கண்காணிப்பு இல்லாதது இவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
எனவே விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடமைகள் பாதுகாப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






