search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி
    X

    புதுக்கோட்டை அருகே வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி

    புதுக்கோட்டை அருகே ஆம்னி வேன் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

    பொன்னமராவதி:

    சிவகங்கை மாவட்டம் கேசம்பட்டியை சேர்ந்தவர் விஜி ( வயது 27). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த குமார்(27) என்பவருடன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து கேசம்பட்டிக்கு 2 மோட்டார் சைக்கிளில் தனித் தனியே சென்றனர்.

    பொன்னமராவதி - புழுதிபட்டி சாலையில் கேசராபட்டி பகுதியில் செல்லும் போது எதிரே வந்த ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள்களில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். உடனே அவர்களை 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்டு வலையபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார். குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி வேன் டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த விஜிக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×