என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுக்கோட்டை அருகே வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி
பொன்னமராவதி:
சிவகங்கை மாவட்டம் கேசம்பட்டியை சேர்ந்தவர் விஜி ( வயது 27). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த குமார்(27) என்பவருடன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து கேசம்பட்டிக்கு 2 மோட்டார் சைக்கிளில் தனித் தனியே சென்றனர்.
பொன்னமராவதி - புழுதிபட்டி சாலையில் கேசராபட்டி பகுதியில் செல்லும் போது எதிரே வந்த ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள்களில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். உடனே அவர்களை 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்டு வலையபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார். குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி வேன் டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த விஜிக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்