என் மலர்
செய்திகள்

கமுதி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி- பரபரப்பு
கமுதி அருகே இருதரப்பினர் மோதலால் கோவில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து கமுதி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலத்தில் பூங்குழலி அம்மன் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. விழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரி டையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், கும்பாபிஷேக விழாவை நடத்த தடை விதித்தனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண்கள் உள்பட 5 பேர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
பொதுமக்களின் இந்த போராட்டம் பகல் 12 முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பின்னர் தாசில்தார் செந்தில்குமார், டி.எஸ்.பி. கணபதி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலத்தில் பூங்குழலி அம்மன் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. விழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரி டையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், கும்பாபிஷேக விழாவை நடத்த தடை விதித்தனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண்கள் உள்பட 5 பேர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
பொதுமக்களின் இந்த போராட்டம் பகல் 12 முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பின்னர் தாசில்தார் செந்தில்குமார், டி.எஸ்.பி. கணபதி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story