என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பலி
Byமாலை மலர்19 Aug 2016 10:20 AM GMT (Updated: 19 Aug 2016 10:21 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு ஊழியராக இருப்பவர் செந்தில்முத்து. இவரது மனைவி முத்துமாரி (வயது34). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் செந்தில்முத்து, தனது மோட்டார் சைக்களில் ராஜபாளையத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு அழைத்து சென்றார்.
பின்னர் 2பேரும் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் ஊர் திரும்பினர். ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துமாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். செந்தில் முத்து காயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தேனி மாவட்டம், உத்தம பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X