என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடி அருகே நள்ளிரவில் திருட்டு மணல் கடத்திய லாரி உரிமையாளர் கைது
Byமாலை மலர்19 Aug 2016 6:47 AM GMT (Updated: 19 Aug 2016 6:47 AM GMT)
ஆவடி அருகே நள்ளிரவில் திருட்டு மணல் கடத்திய லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த பொத்தூர் ஏரியில் அடிக்கடி திருட்டு மணல் அள்ளுவதாக ஆவடி துணை போலீஸ் கமிஷனர் சுதாகருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மணல் கடத்துபவர்களை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று இரவு பொத்தூர் ஏரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் 2 லாரிகள், 2 டிராக்டர்களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அனைவரும் தப்பி ஓடினர். அப்போது லாரி உரிமையாளர் ராஜேந்திரன் மட்டும் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். 2 லாரிகள், 2 டிராக்டர்கள், ஒரு ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிராக்டர் உரிமையாளர் சுரேஷ் உள்பட 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X