என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நொய்யல் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது
வேலயுதம்பாளைம்:
குந்தானிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது29) இவர் அருகாமையில் உள்ள நாடார்புரத்தில் ஒரு பெட்டி கடை அருகே திருட்டுத்தனமாக பிராந்திபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதாவிற்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பிராந்தி பாட்டில்களை வைத்து சுரேஷ் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 15 பிராந்திப்பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் நொய்யல் பங்களாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (47) இவர் அருகாமையில் உள்ள அண்ணாநகரில் ஒரு பெட்டி கடை அருகே திருட்டுத்தனமாக பிராந்திபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பிராந்தி பாட்டில்களை வைத்து சுப்பிரமணி விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 410 பிராந்திப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்