என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
Byமாலை மலர்18 Aug 2016 12:20 PM GMT (Updated: 18 Aug 2016 12:21 PM GMT)
மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பதவிக்கான குடிமைப்பணி தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற ஏதுவாக தமிழக அரசின் ஆணைக்கிணங்க சென்னை -4, இராணி மேரி கல்லூரியிலும், மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
2016-2017 ஆம் ஆண்டிற்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 08.08.2016 லிருந்து 24.08.2016 என நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்குறித்த இறுதி நாளுக்குள் மதுரை அல்லது சென்னை ஆகிய மையங்களுக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு சென்னை இராணி மேரி கல்லூரி (044 – 2844 4995) மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (0452 – 2534 988) முதல்வர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பதவிக்கான குடிமைப்பணி தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற ஏதுவாக தமிழக அரசின் ஆணைக்கிணங்க சென்னை -4, இராணி மேரி கல்லூரியிலும், மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
2016-2017 ஆம் ஆண்டிற்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 08.08.2016 லிருந்து 24.08.2016 என நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்குறித்த இறுதி நாளுக்குள் மதுரை அல்லது சென்னை ஆகிய மையங்களுக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு சென்னை இராணி மேரி கல்லூரி (044 – 2844 4995) மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (0452 – 2534 988) முதல்வர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X