என் மலர்
செய்திகள்

ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
வாகன சோதனையின் போது ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 4 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவான்மியூர்:
நீலாங்கரையை அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கருப்பசாமி, பாஸ்கர், கருணாகரன், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் துரை மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது 4 தனியார் ஆம்னி பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், சாலைவரி செலுத்தாமலும் இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிலிருந்த பயணிகளை வேறு பஸ்களில் அனுப்பி வைத்து 4 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆம்னி பஸ்களும் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
நீலாங்கரையை அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கருப்பசாமி, பாஸ்கர், கருணாகரன், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் துரை மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது 4 தனியார் ஆம்னி பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், சாலைவரி செலுத்தாமலும் இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிலிருந்த பயணிகளை வேறு பஸ்களில் அனுப்பி வைத்து 4 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆம்னி பஸ்களும் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
Next Story






