என் மலர்

    செய்திகள்

    சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தினவிழா
    X

    சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூரில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    சிவகங்கை:

    சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் லட்சுமிபிரியா ஜெயந்தன் தேசியக்கொடியேற்றினார். செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமிர்தலிங்கம் கொடியேற்றினார். தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சங்கு முத்தையா தேசியக்கொடியேற்றினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    எஸ்.எஸ்.மெட்ரிக்பள்ளியில் பள்ளி தாளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி செயலர் சந்திரசேகர் கொடியேற்றினார். முதல்வர் ஹேமமாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி செயலர் சந்திரசேகர் கொடியேற்றினார். முதல்வர் ஹேமமாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானசந்திரன் கொடியேற்றினார். சார்பு ஆய்வாளர்கள் முனுசாமி, ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் முகமது நசீர் கொடியேற்றினார்.

    மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் கோஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தினவிழா மாணவர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தில்வேல் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    கேப்பர்பட்டணம் கிராமத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் முன்னிலையில் கிராம தலைவர் ஜோசப் ஜெயசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    சிப்காட் வளாகத்தில் உள்ள செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் அலெக்ஸ் பிரபாகர் முன்னிலையில் டாக்டர் பாஸ்கரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    இதேபோல் செய்களத்தூர் காமாட்சி அம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாபா மெட்ரிக் பள்ளி, பாபா நர்சரி பள்ளி, மெலிண்டன் சி.பி.எஸ். பள்ளி, அரசு மருத்துவமனை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பல இடங்களில் 70-வது சுதந்திர தினவிழா நடந்தது.

    காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் ஆய்வக இயக்குநர் விஜயமோகனன் பிள்ளை தேசியக் கொடி ஏற்றி வைத்து பேசினார். 70-ம் ஆண்டு சுந்தர தினவிழாவினை கொண்டாடும் வகையில் சிக்ரி மருத்துவமனை வளாகத்தில் 70 மரக் கன்றுகள் நடப்பட்டன. மேலும் ஆய்வக வளாகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் சிசு வித்யாலயா பள்ளிகளில் தேசியக் கொடியேற்றப்பட்டது.

    காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் கல்லூரிகளின் தலைவர் அய்யப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் எம்.பி.ஏ. பிரிவில் 100 சதவீதம் மற்றும் பி.ஈ பிரிவில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக பேராசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டினார்.

    சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைத்துறை இயக்குநர் கலியமூர்த்தி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். கல்லூரிகளின் பொருளாளர் ராமசுப்பிர மணியன், இயக்குநர் அண்ணாமலை, முதல்வர் முத்துப்பாண்டி மற்றும் அனைத்து பேராசிரியர்களும், மாணவ-மாணவிகளும், கல்லூரி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சிறப்பு விருந்தினராக நீதிபதி சரவண செந்தில்குமார் கலந்து கொண்டு தேசியக் கொடி யேற்றினார்.

    பள்ளியின் தாளாளர் சத்யன், துணை முதல்வர்கள் வெங்கடரமணன், அருள் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
    Next Story
    ×