என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் சிக்னல் கோளாறு: மின்சார ரெயில் சேவை பாதிப்பு
தாம்பரத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.15 மணியளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
மின்சார ரெயில்கள் அனைத்தும் அந்தந்த ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. ஆனால் தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வழக்கம் போல் மின்சார ரெயில் இயக்கப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரிசெய்தனர். இதை தொடர்ந்து 12 மணிக்கு மேல் ரெயில் சேவை சீரானது.
Next Story