என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் காவிரி பாதுகாப்பு நடைபயண குழுவினர் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை:
சுவாமி ராமானந்தா தலைமையிலான காவிரி பாதுகாப்பு நடைபயணக்குழுவினருக்கு, மயிலாடுதுறையில் வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடைபயணம் மேற்கொண்ட காவிரி பாதுகாப்பு பயணக்குழுவினர், துலாக்கட்ட காவிரியில் ஆரத்தி வழிபாடு செய்தனர்.
காவிரியின் தூய்மையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக, அகில பாரத துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையிலான காவிரி பாதுகாப்பு பயணக் குழுவினர் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியிலிருந்து காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 15 பயணம் தொடங்கிய காவிரி பாதுகாப்பு பயணக்குழுவினர், மயிலாடுதுறைக்கு வந்தடைந்தனர். அக்குழுவினருக்கு, காவிரி பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில், மயிலாடுதுறை காவேரி நகரில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபயணம் மேற்கொண்ட அக்குழுவினர், துலாக்கட்ட காவிரியில் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்து ஆரத்தி எடுத்து காவிரியை வழிபட்டனர்.






