என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை: சங்க கூட்டத்தில் தீர்மானம்
    X

    ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை: சங்க கூட்டத்தில் தீர்மானம்

    ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஜெயங்கொண்டம் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர்கள் நலசங்க கூட்டம் ஜெயங்கொண்டம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்டதலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ராமதாஸ், கோபால், காசிநாதன், சோமு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சில நிர்வாக குளறுபடியின் காரணமாக காவலர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள பதவி உயர்வு மற்றும் பணப்பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுதாரர் மற்றும் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு காலம் தாழ்த்தாமல் கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முருகேசன், கண்ணையன், நடராஜன், சிவசாமி, ராஜகோபால், அன்பழகன், அப்பாதுரை, வரதராஜன், புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் இறந்த ஓய்வுபெற்ற காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக துணைத்தலைவர் பெருமாள் வரவேற்றார். முடிவில் காமராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×