என் மலர்
செய்திகள்

ஆசிரியரை இடமாற்றம் செய்ததால் திடீர் சாலை மறியல்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பழங்கள்ளிமேட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ஆசிரியரை இடமாற்றம் செய்து விட்டனர்.
இதுபற்றி அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஒன்றுதிரண்டு பழங்கள்ளிமேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு அருகே நாகை-வேதாரண்யம் சாலையில் இன்று காலை சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தாசில்தார் இளங்கோவன் மற்றம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடம் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்






