என் மலர்
செய்திகள்

திருப்போரூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
திருப்போரூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த மானாம்பதிபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த கழனிபாக்கம் கிராமம் லட்சுமிநாராயணபுரம் பகுதியைச்சேர்ந்தவர் துரை. இவர் ஊராட்சியின் 6-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருடைய மகன் அரவிந்த் (வயது 22)எலக்ட்ரீசியன். குண்ணப்பட்டு அருகே உள்ள ஜப்பான் சிட்டி வளாத்தில் நடைபெற்று வரும் தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று மாலை அவர் பணியில் இருந்தபோது வளாகத்தில் தேங்கியிருந்த நீரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதனை அறியாமல் அரவிந்த அதில் கால்வைத்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இது குறித்த மானாம்பதிபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






