என் மலர்
செய்திகள்

கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு
ஆலந்தூர்:
சென்னை திருவான்மியூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 36). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டார். அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. ராதா கிருஷ்ணன் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர். இதுபற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






