என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே பாம்பு கடித்து முதியவர் பலி
ஜெயங்கொண்டம் அருகே பாம்பு கடித்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம் :
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஒடப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் பிச்சமுத்து (வயது65). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர் அதிகாலை சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வெளியே வருவதற்காக முற்பட்டபோது அருகாலில் இருந்த பாம்பு கடித்துள்ளது.
வலி தாங்கமுடியாமல் சத்தம்போடவே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் செல்லும்போது இறந்துவிட்டதாக பிச்சமுத்து மகன் விஜயகுமார் மீன்சுருட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றார்.
Next Story






