search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்
    X

    திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 45 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
    திருப்புவனம்:

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 45 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இதற்காக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுமார் 700 வாக்குப்பதிவு பெட்டிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் அனைத்து வாக்குப்பெட்டிகளையும் மராமத்து செய்து அனைத்து பெட்டிகளும் நல்ல முறையில் இயங்கும்படி தயார் செய்தனர். இந்த பணிகளை ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி பார்வையிட்டு அனைத்து பெட்டிகளையும் பழுது நீக்கி தரமாக தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×