என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி :
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 137 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வைரக்கண்ணு மகன் கணேஷ்குமார் (வயது 30), பிச்சைபாண்டி (46), முகமதுகான் (48) மற்றும் ஒருவர் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் 4 பேரையும் கைது செய்து, விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே 4 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் 4 மீனவர்களையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகை கணேஷ்குமாரின் விசைப்படகு மீது மோத விட்டதாகவும், இதனால் படகு சேதமடைந்ததாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே படகை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கடந்த 3-ந்தேதி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுந்தரம், முருகேசன், சூசை ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகு பழுதாகியது. அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், 3 பேரையும் விசைப்படகுடன் இலங்கை அழைத்து சென்றனர். பின்னர் படகை சரி செய்ததோடு, சாப்பாடு கொடுத்து உபசரித்து, இந்திய கடல் எல்லையில் விட்டு சென்றனர்.
இந்நிலையில் இன்று ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 137 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வைரக்கண்ணு மகன் கணேஷ்குமார் (வயது 30), பிச்சைபாண்டி (46), முகமதுகான் (48) மற்றும் ஒருவர் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் 4 பேரையும் கைது செய்து, விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே 4 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் 4 மீனவர்களையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகை கணேஷ்குமாரின் விசைப்படகு மீது மோத விட்டதாகவும், இதனால் படகு சேதமடைந்ததாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே படகை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கடந்த 3-ந்தேதி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுந்தரம், முருகேசன், சூசை ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகு பழுதாகியது. அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், 3 பேரையும் விசைப்படகுடன் இலங்கை அழைத்து சென்றனர். பின்னர் படகை சரி செய்ததோடு, சாப்பாடு கொடுத்து உபசரித்து, இந்திய கடல் எல்லையில் விட்டு சென்றனர்.
இந்நிலையில் இன்று ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






