என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் ஷாட் என்ற பெயரில் மாமல்லபுரம் கடற்கரையில் ஆபாச படம்: போலீசார் எச்சரிக்கை
    X

    ரியல் ஷாட் என்ற பெயரில் மாமல்லபுரம் கடற்கரையில் ஆபாச படம்: போலீசார் எச்சரிக்கை

    ரியல் ஷாட் என்ற பெயரில் மாமல்லபுரம் கடற்கரையில் ஆபாசமாக படம் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையில் சிற்பங்கள் மற்றும் குடவரை கோவில்களின் பின்னனியில் தத்ரூப மாக போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்காக புதுமணத் தம்பதியர் பலர் சென்னை, பெங்களுர், கேரளா,ஆந்திரா, போன்ற பல பகுதிகளில் இருந்து கேமராமேன்களுடன் மாமல்லபுரம் வந்து தங்குகிறார்கள்.

    இவர்கள் எடுக்கும் காட்சிகளுக்கு சன்ரைஸ் ஷாட், ரியல் ஷாட், கேன்டிட் ஷாட் என பல பெயர்கள் வைத்துள்ளனர். இந்த படப்பிடிப்பின் போது எல்லை மீறி ஆபாசமாகவும், நெருக்கமாகவும் படம் பிடிக்கப்படுவதாக தெரிகிறது.

    இதனால் கேளி, கிண்டல், ஆபாச பேச்சு போன்ற செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு சில நேரங்களில் அடிதடியாகவும் மாறுகிறது. இது விசாரணைக்கு வரும் போது அனைவரும் பெரிய இடத்து நபர்களாகவும், புதுமணத் தம்பதியராகவும் உள்ளனர்.

    இது குறித்து மாமல்லபுரம் டி.எஸ்.பி சேகர் கூறும் போது, “சாதாரண உடையில் ஆண்,பெண் போலீசார் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் கடற்கரை, மற்றும் புராதன சின்னங்கள் பகுதியை கண்காணித்து வருகிறார்கள்.

    அப்போது எல்லை மீறி ஆபாசமாக படம் பிடிப்போரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகிறோம். அவர்கள் உண்மையிலேயே தம்பதியர்களாக இருந்தால் பெற்றோரிடம் போனில் பேசவைத்து அவர்களுடன் சேர்ந்து வரும்படி அறிவுறுத்தி அனுப்புகிறோம்.

    அதேநேரம் குறும்படம், டாக்குமென்டரி எடுக்கும் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்தால் முதல் தடவை எச்சரிக்கையும் பின்னர் சட்டப்படி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

    Next Story
    ×