என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் அருகே பெண் டாக்டர் வீட்டில் 72 பவுன் நகை கொள்ளை
    X

    தாம்பரம் அருகே பெண் டாக்டர் வீட்டில் 72 பவுன் நகை கொள்ளை

    தாம்பரம் அருகே குடியிருப்புக்கு மத்தியில் உள்ள பெண் டாக்டர் வீட்டில் 72 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம், திருமுருகன் சாலை சி.வி.ராமன் தெருவில் வசித்து வருபவர் சாரதா. டாக்டர். தனியாக வசித்து வருகிறார். இவர் படப்பையில் சொந்தமாக கிளினிக் வைத்து உள்ளார். தினமும் மாலையில் வீட்டில் இருந்து செல்லும் சாரதா இரவு 11 மணியளவில் திரும்பி வருவது வழக்கம்.

    நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு சாரதா, கிளினிக்கிற்கு சென்றார். இரவு திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 72 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை காணவில்லை.

    சாரதா வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் பழைய குற்றவாளிகள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு விசாரணை நடந்து வருகிறது.

    குடியிருப்புக்கு மத்தியில் உள்ள பெண் டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீஞ்சூர் நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு பெரம்பூரில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ 20 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
    Next Story
    ×