என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்று திறனாளிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விமலா, தலைவர் நடராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.40 சதவீதம் ஊனம் இருந்தாலே அரசின் அனைத்து உதவிகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story