என் மலர்
செய்திகள்

சித்தோடு அருகே டீ குடிக்க சென்றவர் வாகனம் மோதி பலி
டீ குடிக்க சென்றவர் வாகனம் மோதி பலியானார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூரியம்பாளையம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55) தொழிலாளி. சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு இவர் வீட்டில் இருந்து டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றார்.
அம்பேத்கார் நகரில் உள்ள ஒரு மெக்கானிக் கடை அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக சென்ற ஏதோ ஒரு வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தலையில் பலத்த அடிபட்டு ரோட்டில் கிடந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






