என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோடு:
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வாட்ஸ் அப்- பேஸ் புக் போன்ற தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்து உள்ளன.
இவைகளை நல்ல செயல்களுக்கு பலர் பயன்படுத்தினாலும் சில வக்கிர குணம் கொண்டவர்கள் இவைகளை தங்களது கொடூர எண்ணங்களுக்கும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
தங்களை காதலிக்காத பெண்களை சில வாலிபர்கள் அவர்களை பழி வாங்குவதாக கருதி அந்த பெண்களை பற்றி ஆபாசமாகவும், இழிவாகவும் வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் வெளியிடுகிறார்கள்.
இதனால் ஏராளமான பெண்கள் அவமானம் தாங்காமல் இன்று தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது போல பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசமான படங்களை சித்தரித்து வாட்ஸ்அப்-பேஸ் புக்கில் வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தியும்,இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஈரோட்டில் இன்று காலை பேரணி நடந்தது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே தொடங்கிய இந்த பேரணி கலெக்டர் அலுவலகம் வரை நடந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர்.
இந்த பேரணியை ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதா தேவி தொடங்கி வைத்து சிறிது தூரம் மாணவ-மாணவிகளுடன் அவரும் நடந்து சென்றார்.






