என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 15). இவர் கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 29-ந்தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, திடீரென சிவரஞ்சனி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள், சிவரஞ்சனி மீது பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவரஞ்சனி இறந்தார்.
இது குறித்து ஆண்டிமடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து சிவரஞ்சனி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவரஞ்சனிக்கு படிப்பு சரியாக வரவில்லை. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






