என் மலர்
செய்திகள்

பெருந்துறை அருகே விபத்து: கார் மெக்கானிக் பலி
ஈரோடு:
பெருந்துறை, ஈரோடு ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், பெருந்துறையில் உள்ள தனியார் பேங்கில் செக்யூரிட்டியாக பணி புரிந்து வரும் இவருக்கு தினேஷ்(25, கவுதம்(23) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கவுதம் கோபி அருகேயுள்ள அத்தாணியில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். பெருந்துறை வந்த இவர் பெருந்துறையை சேர்ந்த சாந்தகுமார் என்பவரது மகன் சித்தார்த் அரவிந்த்(22) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை சித்தார்த் ஓட்டி வர கவுதம் பின்னால் அமர்ந்து சென்றார்.
இவர்கள் கோவை மெயின் ரோட்டில் உள்ள ராஜவீதிக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலைய பகுதியில் வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ்ஸின் பக்கவாட்டில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த கவுதம் பஸ்ஸின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சித்தார்த் வெளியே தூக்கி வீசப்பட்டு காயம் பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கவுதமின் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறியழுதது மிகவும் உருக்கமாக இருந்தது.






