என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் தியேட்டர் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
காரைக்குடி:
காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா முகம்மது (வயது64). இவரது மகன் சேக் அப்துல்லா (26). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 1½ வருடமாக தந்தை–மகனுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று தியேட்டரில் ஆபரேட்டர் அலுவலகம் அருகில் உள்ள அறையில் சேக் அப்துல்லா தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சேக் அப்துல்லா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ராஜா முகம்மது கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து சேக் அப்துல்லா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட சேக் அப்துல்லாவுக்கு சர்மிளா பானு என்ற மனைவி உள்ளார்.






