என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ. 5 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்
    X

    அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ. 5 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்

    அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 18 நபர்களுக்கு ரூ.5 இலட்சத்து 52 ஆயிரத்து 90 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் துரைசாமி என்பவருக்கு ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் சவுதி அரேபியா நாட்டிற்கு வேலைக்கு சென்று இறந்து போன அழகாபுரம் ரவி, முத்து சேர்வாமடம் அருண்குமார் முத்துசாமி ஆகியோர்களின் குடும்பத்திற்கு ரூ.4,58,090 மதிப்பில் இழப்பீட்டு தொகைக்கான காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.4500 வீதம் ரூ.67 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும் என மொத்தம் 18 நபர்களுக்கு ரூ.5 இலட்சத்து 52 ஆயிரத்து 90 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பூமி, துணை ஆட்சியர் (சமூக நல பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×