என் மலர்
செய்திகள்

கேளம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது
திருப்போரூர்:
கேளம்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் முட்டுக்காடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும், அவர்கள் நாவலூர் சம்பலால் தெருவை சேர்ந்த கோபால் கண்ணன் தாழம்பூர் நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பதும் தெரிந்தது.
இருவரும் சிறுசேரி சிப்காட் மற்றும் தையூர் மீன்மார்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக் கொண் டனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டன.
இதே போல் கேளம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிள் திருடர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த பிரதீப்குமார், திருவேற்காடு சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் கோவளம் மற்றும் புதுப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






