என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை, திருக பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன், எழுமலையை சேர்ந்த பாண்டியராஜன், மானாமதுரையை சேர்ந்த பழனிக்குமார், மோகன், மருதுபாண்டி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று வேலை இல்லாத தால் 5 பேரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மது குடித்த தாக கூறப்படுகிறது. மருது பாண்டி கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக மேலே இருந்து தவறி கீழே விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவர் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருதுபாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






