என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு
    X

    மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு

    மொடக்குறிச்சி அருகே மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.

    சீரங்கம்பாளையம், டி.மேட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், சின்னி கவுண்டன்வலசு, பெருமாபாளையம், கனக புரம், கொண்டவநாயக்கன் பாளையம் ஆகிய கிராமப் பொதுமக்கள் ஒன்று கூடினர்.

    இவர்கள் மழை பெய்ய வேண்டியும், கிராமம் செழிக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்து வினோத வழிபாடு நடத்தினர்.

    கிராமத்து மக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற கூடைகள், முறம், உலக்கை, விவசாயத்திற்கு பயன் படுத்திய நுகம், கருவத்தடி, மற்றும் சிதைந்து போன சாமி சிலைகள் உடைந்த அம்மி, குழவிகள் போன்ற பொருட்களை கொண்டு வந்தனர். கிராமஎல்லையில் யாருக்கும் தெரியாமல் போட்டனர்.

    பிறகு ஏழு ஊர் பொது மக்களும் ஊரின் எல்லையில் ஒன்று கூடி கோழிகள் பலி கொடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையடுத்து வேறு கிராமத்து மக்கள் கொண்டுவந்து போட்டுச் சென்ற உடைந்த பழைய பொருட்கள், சாமி சிலைகளை தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து சென்று லக்காபுரம் அருகே காவிரி ஆற்றில் போடப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொறு கிராம எல்லையிலும் எல்லை மாகாளியம்ன் கோவில் இருக்கும் மழையில்லாத காலங்களில் மழை பெய்யவேண்டியும், நாடு செழித்து மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்றும் ஊர்மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனவும் இது போல் வழிபாடு நடத்துவது வழக்கம்’’ என்றனர்.

    Next Story
    ×