என் மலர்
செய்திகள்

சீர்காழியில் மழைநீர் வடிகால் பணி தடுத்து நிறுத்தம்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 2–வது வார்டுக்கு உட்பட்ட தியாகராஜன் நகரில் நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை அருகில் உள்ள கதிர்வேல் நகர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். அப்பொழுது முற்றுகையிட்ட பொதுமக்கள் கூறுகையில், மழைநீர் வடிகால் என்ற பெயரில் வடிகால் வசதி அமைக்கப்பட்டு அருகில் உள்ள பெரப்படி வாய்க்காலில் சென்று கலப்பதால் எதிர்காலத்தில் இந்த வாய்க்காலில் கழிவுநீர் விடப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கழிவுநீர் மூலம் கொசுக்கள் அதிகமாக உருவாகி தொற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படும்.
எனவே அரசு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






